சோமாலியா தலைநகர் மொகதிஷூவில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
சோமாலிய தலைநகர் மொகதிஷூவில் பிரபல விடுதியின் அருகே 3 கார்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் தெரிவித்துள்ளதாவது,
"பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து வெளியான தகவல்கள் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது" என்று காவல் துறை அதிகாரி இப்ராஹிம் முகமது தெரிவித்துள்ளார்.