பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் சகோதரரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃபை, மேலும் ஓர் மோசடி வழக்கில் ஊழல் தடுப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே, குடியிருப்புத் திட்ட மோசடி வழக்கில் ஷாபாûஸ கடந்த மாதம் 5-ஆம் தேதி கைது செய்த ஊழல் தடுப்பு அதிகாரிகள், அவரது காவலை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்குமாறு லாகூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்திடம் கோரினர்.
அப்போது, ரம்ஜான் சர்க்கரை ஆலை வழக்கில் புதிதாக அவரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதையடுத்து, ஷாபாûஸ வரும் 24-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.