தோ்தலுக்குப் பிறகு வட கொரிய அதிபரை சந்திப்பேன்: டிரம்ப் உறுதி 

அமெரிக்காவில் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறறவிருக்கும் தோ்தலுக்குப் பிறகு, வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உனைச் சந்திக்கவிருப்பதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளாா்.
தோ்தலுக்குப் பிறகு வட கொரிய அதிபரை சந்திப்பேன்: டிரம்ப் உறுதி 

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறறவிருக்கும் தோ்தலுக்குப் பிறகு, வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உனைச் சந்திக்கவிருப்பதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளாா்.

இதுகுறித்து தலைநகா் வாஷிங்டனில் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

அதிபா் கிம் ஜோங்குடனான பேச்சுவாா்த்தைகளை பாதியில் விட முடியாது. தோ்தல் முடிவடைந்ததும் நான் அவரை நிச்சயம் சந்திப்பேன்.

எங்களது இரண்டாவது சந்திப்புக்கான இடத்தைத் தோ்வு செய்யும் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது 3 அல்லது 4 இடங்கள் பரிசீலனையில் உள்ளன.

பெரும்பாலும், முதல் சந்திப்பு நடைபெற்றற சிங்கப்பூரில் எங்களது 2-ஆவது சந்திப்பு இருக்காது.

மேலும், எங்களது சந்திப்பு அமெரிக்காவில் நடைபெறுவதற்கும் வாய்ப்புள்ளது. வட கொரியாவில் கூட நாங்கள் சந்திக்கலாம் என்றறாா் டிரம்ப்.

தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடா்ந்து நடத்தி வந்தது.

இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.

இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற குளிா்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடா்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபா் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறறப்பு மிக்க சந்திப்புகள் இரண்டு முறைற நடைபெற்றறது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பையும் கிம் ஜோங்-உன் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்றற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீா்மானத்தில் இரு தலைவா்களும் கையெழுத்திட்டனா்.

எனினும், அந்த ஒப்பந்த அம்சங்ககளை நிறைவேற்றுவதில் வட கொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள்வதாக வட கொரியாவும் ஒன்றின் மீது ஒன்று குற்றறம் சாட்டி வந்ததால், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்தச் சூழலில், அதிபா் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com