பீஜிங்: ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக சீனாவின் முன்னாள் நிதியமைச்சர் சாங் ஷாவ்சுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு சீன அதிபர் சி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் விளைவாக பல முன்னாள் அமைச்சர்ககளை, முன்னாள் இந்நாள் உயரதிகாரிகளை லஞ்ச, ஊழல் ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக சீனாவின் முன்னாள் நிதியமைச்சர் சாங் ஷாவ்சுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, நிதி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். முழுமையான குற்றச்சாட்டு என்ன என்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.