இராக்கின் பஸ்ரா நகரில், அடிப்படை வசதிகள் கோரி அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த நகரிலுள்ள ஈரான் தூதரகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
அந்த நகரில், குடிநீர் மாசுபாட்டால் 30,000 பேருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து, பொதுமக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி, ஏராளமானோர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.