அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள சக்தி வாய்ந்த ஃபிளாரன்ஸ்' புயல், அமெரிக்காவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இதையடுத்து, ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்களை அதிகாரிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், பல ஆண்டுகள் கழித்து கிழக்குக் கடலோரப் பகுதியைத் தாக்கவிருக்கும் மிக மோசமான புயல் இது' என்று குறிப்பிட்டுள்ளார். ஃபிளாரன்ஸ்' புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.