தொலைபேசி அழைப்பை ஏற்கத் தவறிய ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதரை, அதிபர் மைத்ரிபால சிறீசேனா திரும்ப அழைத்துள்ளார்.
பிரியா விஜசேகர என்ற அந்த பெண் தூதரையும், மற்ற 5 தூதரக அதிகாரிகளையும் அதிபர் சிறீசேனா கடந்த வாரம் பல முறை தொலைபேசியில் அழைத்தும் அவர்கள் பதிலளிக்கவில்லை. எனவே, தூதரையும், 5 அதிகாரிகளையும் உடனடியாக நாடு திரும்புமாறு அதிபர் சிறீசேனா உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அவர் என்ன காரணத்துக்காக தூதரைத் தொடர்பு கொள்ள முயன்றார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
தூதர் திரும்ப அழைக்கப்பட்டதை வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தினாலும், அதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.