3-ஆவது கொரிய மாநாடு: அணு ஆயுத விலக்கலுக்கு முக்கியத்துவம்'

வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையே செவ்வாய்க்கிழமை (செப். 18) நடைபெறும் சந்திப்பின்போது, அணு ஆயுத விலக்கல்
3-ஆவது கொரிய மாநாடு: அணு ஆயுத விலக்கலுக்கு முக்கியத்துவம்'


வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையே செவ்வாய்க்கிழமை (செப். 18) நடைபெறும் சந்திப்பின்போது, அணு ஆயுத விலக்கல் விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தென் கொரியா கூறியுள்ளது.
இதுகுறித்து மூன் ஜே-இன் அலுவலக தலைமை அதிகாரி ஜாங்-சியோக் கூறியதாவது:
வட கொரியாவுக்கு செவ்வாய்க்கிழமை செல்லும் அதிபர் மூன் ஜே-இன், அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உனைச் சந்தித்துப் பேசும்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்கும் விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
அணு ஆயுதங்களைக் கைவிடும் வட கொரியாவின் நடவடிக்கைகளை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்வது, அதற்குப் பதிலாக வட கொரியாவுக்கு அமெரிக்கா அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஆகிவை குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்றார் அவர்.
தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.
இதற்குப் பதிலடியாக, வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலும், அமெரிக்காவும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. 
இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றது.
அதனைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் கிம் ஜோங்-உன் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
எனினும், அந்த ஒப்பந்த அம்சங்ககளை நிறைவேற்றுவதில் வட கொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள்வதாக வட கொரியாவும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்ததால், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், வட - தென் கொரிய அதிபர்களின் 3-ஆவது சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com