தென் சீனக் கடல் பகுதியில் போர் ஒத்திகை!

தென் சீனக் கடல் பகுதியில் போர் ஒத்திகை!

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில், ஜப்பான் கடற்படைக்குச் சொந்தமான நீர்முழ்கிக் கப்பல்கள் முதல் முறையாக திங்கள்கிழமை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டன.


சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில், ஜப்பான் கடற்படைக்குச் சொந்தமான நீர்முழ்கிக் கப்பல்கள் முதல் முறையாக திங்கள்கிழமை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டன.
இதற்கு, சீனா கடும் கண்டனம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் சீனக் கடல் பகுதியின் பல தீவுகளில் பிராந்திய நாடுகள் உரிமை கோரினாலும், அந்தப் பகுதியில் 
ஏறத்தாழ அனைத்து இடங்களையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், அந்தப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை அமைப்பதுடன், ராணுவ மயமாக்கி வருவதாக சீனா மீது பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com