ஆப்கானிஸ்தானில், காவலர் துப்பாக்கியால் சுட்டதில் அவருடன் பணியாற்றிய 9 போலீஸார் உயிரிழந்தனர். அந்த நாட்டின் வடக்கே அமைந்துள்ள பால்க் மாகாணத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், சார் போல்தக் என்னுமிடத்திலுள்ள காவல் சாவடியில் இருந்த சக காவலர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்ட முகமது கான்ஜிர் என்பவர், அங்கிருந்த துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தலைமறைவானதாகத் தெரிவித்தனர். ஆயுதங்களுடன் அவர் தலிபான் அமைப்பில் இணைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.