நைஜீரியாவில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழை காரணமாக 10 மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இந்த வெள்ளத்தை தேசியப் பேரிடராக நைஜீரிய அரசு அறிவித்துள்ளது.
பருவ மழை காரணமாக, நாட்டின் முக்கிய ஆறுகளான நைஜர் மற்றும் பெனியூவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கின.
இதையடுத்து, ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளில் சிக்கியுள்ள நிலையில், மழை தொடர்ந்து பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது