வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையேயான சந்திப்புக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க செய்தித் தொடர்பாளர், இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேசுவது இந்தியர்களுக்கும், பாகிஸ்தானியர்களுக்கும் திகிலூட்டும் செய்தியாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
இரு நாட்டு நல்லுறவுக்கு இந்த சந்திப்பு வழிவகுக்கும் என்றும், பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இந்தியப் பிரதமர் மோடிக்கு இடையேயான கடிதப் பரிமாற்றத்தில் இருக்கும் கருத்துகள், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் என்று நம்புவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.