தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை காலை முதல் செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரியாற்றில் சனிக்கிழமை மாலை வரை நொடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி இந்த வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால், பொதுப்பணித் துறையினர் பிற்பகல் தண்ணீர் வரத்து அளவீடு செய்ய வரவில்லை எனத் தெரிகிறது. காலை தண்ணீர் வரத்து நிலவரம் குறித்த குறுஞ்செய்தி வருவாய்த் துறை அலுவலர்களுக்கு வந்திருக்கிறது.