• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு விவசாயம்

நெல்லை மாவட்டத்தில் கார் பருவ சாகுபடி பணிகள் தீவிரம்

By  திருநெல்வேலி  |   Published on : 06th July 2018 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

tvl

திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. நாற்றுப் பாவுதல், நடவு செய்தல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
 தாமிரவருணி பாசனத்தில் பாபநாசம் அணையின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 11 கால்வாய்கள் மூலம் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து ஜூன் 24இல் தண்ணீர் திறக்கப்பட்டது.
 முதல் கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 7 கால்வாய்களில் 20,769 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. இதையடுத்து, கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய் பாசனத்தில் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
 இம்மாவட்டத்தில் நிகழ் கார் பருவத்தில் 25 ஆயிரம் ஏக்கர் நெல் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, பாளையங்கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தென்காசி, செங்கோட்டை வட்டங்களில் முழு அளவில் விவசாயிகள் நாற்று பாவுதல், நடவு செய்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 பாபநாசம் அணையின் மூலம் இவ்விரு மாவட்டத்தில் பாசனம் பெற்று வரும் நிலங்களுக்கு முழுமையாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரவருணி பாசனத்தில் அனைத்து கால்வாய்கள் மூலம் பாசனம் பெற்று வரும் நிலங்கள், குடிநீர்த் தேவைக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 6) முதல் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரை தண்ணீர் வழங்க அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
 நீர்மட்டம் நிலவரம்: வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 95.30 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 77.39 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83.73 அடியாக இருந்தது. பிற அணைகளில் நீர்மட்டம்: கடனாநதி அணை 68.50 அடி, ராமநதி அணை 70 அடி,
 கருப்பாநதி அணை 67.53 அடி, குண்டாறு அணை 36.10 அடி, அடவிநயினார் அணை 114.75 அடி, வடக்குப் பச்சையாறு அணை 9.50 அடி, நம்பியாறு அணை 11.58 அடி, கொடுமுடியாறு அணை 46.50 அடி.
 பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 164.67 கனஅடி, சேர்வலாறு அணைக்கு 386.02 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 98 கனஅடி, கடனாநதி அணைக்கு 60 கனஅடி, ராமநதி அணைக்கு 15.34 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 10 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 6 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 28 கனஅடி நீர்வரத்து இருந்தது.
 பாசனம், குடிநீர்த் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 904.75 கனஅடி, மணிமுத்தாறு அணையில் 375 கனஅடி, கடனாநதி அணையில் 60 கனஅடி, ராமநதி அணையில் 40 கனஅடி, கருப்பாநதி அணையில் 25 கனஅடி, அடவிநயினார் அணையில் 35 கனஅடி, கொடுமுடியாறு அணையில் 50 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
 
 
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்