நாளை தமிழ் அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம்

பெங்களூர், பிப். 10: தமிழ் அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம் கோலார் தங்கவயலில்  உள்ள கோல்டன் சிட்டி கிரியேஷன்ஸ் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதுகுறித்து பொங்குதமிழ் மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பா
Published on
Updated on
1 min read

பெங்களூர், பிப். 10: தமிழ் அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம் கோலார் தங்கவயலில்  உள்ள கோல்டன் சிட்டி கிரியேஷன்ஸ் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து பொங்குதமிழ் மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் கு.கணேசன் வெளியிட்ட அறிக்கை: கோலார் தங்கவயலில் பொங்குதமிழ் மாநாடு மற்றும் இலங்கைத் தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துகுமாரின் 3-ம் ஆண்டு நிகழ்வு ஆகியவை ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து தமிழ்ச் சங்கங்களும், தமிழ் அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்க வைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு கோல்டன் சிட்டி கிரியேஷன்ஸ் கிளப்பில் நடைபெறும். தமிழ் அமைப்புகள் அனைவரும் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com