பெங்களூருவில் டிச. 12 முதல் சதுர்வேத பாராயணம்
By பெங்களூரு, | Published on : 19th November 2013 05:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெங்களூருவில் வருகிற டிசம்பர் 12 முதல் 17-ஆம் தேதி வரை சதுர்வேத பாராயணம் நடைபெறுகிறது.
இதுகுறித்து வேத மேம்பாட்டு அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை:
வேதங்கள் கடவுளின் மூச்சு போன்றது. கடவுள் அழிவில்லாதவர். அதேபோல, வேதங்களும் அழிவில்லாதவை. வேதங்களைப் பரப்புவதற்காக 59 ஆண்டுகளுக்கு முன்பு கே.எஸ்.ராமநாத ஐயர் வேத மேம்பாட்டு அறக்கட்டளையைத் தொடங்கினார்.
60-ஆவது ஆண்டாக சதுர்வேத பாராயணம், பெங்களூருவில் வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்குகிறது. வித்யாரண்யாபுரத்தில் உள்ள நந்தகிஷோர் பவனில் தினமும் காலை 8 முதல் நண்பகல் 12 வரையிலும், பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரையிலும் பாராயணம் நடைபெறும்.
இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 080-28462104, 9901131950 என்ற தொலைபேசியில் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.