உத்தரப் பிரதேசத்தில் மர்மமான முறையில் கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி அனுராக்திவாரி உயிரிழந்தது குறித்து நியாயமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பாஜக எம்.பி. ஷோபா கரந்தலஜே கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடித விவரம்:
கர்நாடக உணவு மற்றும் பொதுவழங்கல் துறை ஆணையரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அனுராக்திவாரி உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னெüவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
ஊடகங்களின் தகவலின்படி, லக்னெüவில் ஹஸ்ரத்கஞ்ச் என்ற இடத்தில் அவர் தங்கியிருந்த மீராபாய் விருந்தினர் மாளிகைக்கு அருகில் சாலையோரத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சாலையோரத்தில் ஐஏஎஸ் அதிகாரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இது சந்தேகத்தை அதிகமாக்குகிறது.
காவல் துறையினர் விசாரணை நடத்துவதற்கு முன்பே, அனுராக்தி வாரிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுவது சந்தேகத்தை அதிகமாக்குகிறது.
இதில் ஏதோ மர்ம இருப்பதாக உணர்கிறேன். எனவே, இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும். இந்த விவகாரத்தில் உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.