தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கிறிஸ்தவ விழா: தரூர் ரயில் நிலையத்தில் தாற்காலிகமாக ரயில்கள் நிறுத்தம்

மெத்த டிஸ்ட் தேவாலய திருவிழாவையொட்டி, தரூர் ரயில் நிலையத்தில் தாற்காலிகமாக ரயில்கள் நிறுத்தப்படுகிறது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 3:03 am

DIN

மெத்த டிஸ்ட் தேவாலய திருவிழாவையொட்டி, தரூர் ரயில் நிலையத்தில் தாற்காலிகமாக ரயில்கள் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரூரில் உள்ள மெத்தடிஸ்ட் தேவாலயத்தில் நடக்கவிருக்கும் கிறிஸ்தவ பெருவிழாவை முன்னிட்டு நவ.19-ஆம் தேதி வரை தரூர் ரயில் நிலையத்தில் 4 ரயில்கள் தாற்காலிகமாக நின்று செல்லும்.
ரயில் எண்-16593-நாந்தேட்-பெங்களூரு விரைவு ரயில் தரூர் ரயில் நிலையத்திற்கு மாலை 3.13 மணிக்கு வந்து மாலை 3.14 மணிக்கும்; ரயில் எண்-16594-பெங்களூரு-நாந்தேட் விரைவுரயில் தரூர் ரயில் நிலையத்திகு நண்பகல் 1.01 மணிக்கு வந்து, நண்பகல் 1.02 மணிக்கும்; ரயில் எண்-16572-பீதர்-யஷ்வந்த்பூர் விரைவுரயில் தரூர் ரயில் நிலையத்திற்கு இரவு 8.47 மணிக்கு வந்து, இரவு 8.48 மணிக்கு புறப்படும்.
ரயில் எண்-16571-யஷ்வந்த்பூர்-பீதர் விரைவு ரயில் தரூர் ரயில் நிலையத்திற்கு காலை 6.43 மணிக்கு வந்து, காலை 6.44 மணிக்குப் புறப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.