இந்தியாவில் 5 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று ஒரிகோ குழுமத் தலைவர் சலீம் அல் ராவஹை தெரிவித்தார்.
பெங்களூரில் ஆசியான் தொழில் மாநாட்டையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
மஸ்கட், ஓமனில் இயற்கை முறையிலான அழகு சாதனங்களுக்கு புகழ்பெற்ற ஒரிகோ குழுமம் பெங்களூரில் தனது உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளது. இதனை மேம்படுத்த மேலும் 5 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
மஸ்கட், ஓமன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்ற எங்களின் உற்பத்தி பொருள்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதில் பெருமை அடைகிறோம். இயற்கையிலான தரமான பொருள்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்றார் அவர்.