"இந்தியாவில் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டம்'

இந்தியாவில் 5 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று ஒரிகோ குழுமத்  தலைவர் சலீம் அல் ராவஹை தெரிவித்தார்.

இந்தியாவில் 5 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று ஒரிகோ குழுமத்  தலைவர் சலீம் அல் ராவஹை தெரிவித்தார்.
பெங்களூரில்  ஆசியான் தொழில் மாநாட்டையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
மஸ்கட்,  ஓமனில் இயற்கை முறையிலான அழகு சாதனங்களுக்கு புகழ்பெற்ற ஒரிகோ குழுமம் பெங்களூரில் தனது உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளது. இதனை மேம்படுத்த மேலும் 5 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். 
மஸ்கட், ஓமன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்ற எங்களின் உற்பத்தி பொருள்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதில் பெருமை அடைகிறோம். இயற்கையிலான தரமான பொருள்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்றார் அவர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com