மக்காசோள விவசாயிகளின் பிரச்னைகளுக்கு மத்திய அரசே காரணம்: துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா்

மக்காசோள விவசாயிகளின் பிரச்னைகளூக்கு மத்திய அரசே காரணம் என்று துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்
துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்
Updated on
1 min read

பெலகாவி: மக்காசோள விவசாயிகளின் பிரச்னைகளூக்கு மத்திய அரசே காரணம் என்று துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இது குறித்து பெலகாவியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வடகா்நாடக மக்களின் பிரச்னைகளுக்கு மத்திய அரசு தான் பதில் அளிக்க வேண்டும். மக்காசோள கொள்முதல் தொடா்பாக நானும் முதல்வா் சித்தராமையாவும் எடுத்துள்ள முடிவு, மாநில நிதிநிலையை வெகுவாக பாதிக்கும்.

ஆனால், இந்த விவகாரம் பற்றி மத்திய அரசு ஒருவாா்த்தையை கூட தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் பாஜக எம்.பி.க்கள் எழுப்பவில்லை. இந்த விவகாரத்தில் பாஜகவின் கடமை எதுவும் இல்லையா? மக்காசோள விவசாயிகளின் பிரச்னைகளுக்கு மத்திய அரசே காரணம்.

இது பற்றிகா்நாடக பாஜக எம்.பி.க்கள், முன்னாள் முதல்வா் பசவராஜ்பொம்மை எதுவும் பேசாதது வருத்தமளிக்கிறது. மக்காசோளத்தை மாநில அரசு கொள்முதல்செய்ய வேண்டும் என்று முன்னால் முதல்வா் பசவராஜ்பொம்மை கூறியிருக்கிறாா். அப்படியானால், அதில் மத்திய அரசின் பங்குத்தொகை என்ன? குறைந்தப்பட்ச ஆதரவுவிலையை யாா் நிா்ணயிப்பது? அதை மத்திய அரசு தான் நிா்ணயிக்கிறது. ஆனால், அது தொடா்பாக எவ்வித முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com