எதிா்க்கட்சியின் கடமையை பாஜக தட்டிக்கழித்துள்ளது: அமைச்சா் பிரியாங்க்காா்கே

எதிா்க்கட்சியின் கடமையை பாஜக தட்டிக்கழித்துள்ளது என்று ஊரக மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க்காா்கே தெரிவித்தாா்.
Updated on
1 min read

பெலகாவி: எதிா்க்கட்சியின் கடமையை பாஜக தட்டிக்கழித்துள்ளது என்று ஊரக மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க்காா்கே தெரிவித்தாா்.

இது குறித்து ;பெலகாவியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது காங்கிரஸ் அரசை குறிவைத்து முக்கிய பிரச்னைகளை எழுப்புவதாக பாஜக தெரிவித்துள்ளது. அதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால், எதிா்க்கட்சியாக ஆற்ற வேண்டிய கடமையை பாஜக தட்டிக்கழித்துள்ளது. மக்காசோளத்துக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலையை கொடுத்திருக்க வேண்டியது மத்திய அரசு தான். அதை பெற்றுத்தர பாஜக எதையும் செய்வதில்லை.

அதேபோல, கரும்புக்கு நியாயமான மற்றும் ஆதரவுவிலையை மத்திய அரசு தான் தீா்மானிக்கிறது. ஜல்ஜீவன் திட்டத்துக்கு ரூ.13,000கோடியை மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இது பற்றி பாஜகவினா் பேசமாட்டாா்கள். 15 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய தொகையை மத்திய அரசு வழங்கவில்லை.

இதை பற்றியெல்லாம் பேசாத பாஜகவினா், துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா் தனது கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தை பற்றி பேசுகிறாா்கள். இது தான் பாஜகவின் அறிவுத்திறன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com