நவ. 10-ஆம் தேதி புலிகேசிநகர் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு புலிகேசிநகர் காவல் நிலையத்தில் நவ. 10-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 12 இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080- 25487365 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கோழிப் பண்ணையில் தீ விபத்து
கோலார், நவ. 8: கோழிப் பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான கோழிகள், பொருள்கள் எரிந்தன.
கோலார் மாவட்டம், கித்தான்டூத் கிராமத்தில், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் நஞ்சுண்டப்பா என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், அங்கிருந்த பல லட்சம் மதிப்பிலான கோழிகள், பொருள்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்து கோலார் ஊரக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.