லஞ்ச ஒழிப்புப் படை சார்பில் இன்று குறைதீர் முகாம்

பெங்களூரில் லஞ்ச ஒழிப்புப் படை சார்பில் செவ்வாய்க்கிழமை (செப். 11) குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

பெங்களூரில் லஞ்ச ஒழிப்புப் படை சார்பில் செவ்வாய்க்கிழமை (செப். 11) குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் படையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு மாநகர லஞ்ச ஒழிப்புப் படை சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பெங்களூரு மாநகராட்சி ஜெயநகர் துணை ஆணையர் (தெற்கு) அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு லஞ்சம், ஊழல் தொடர்பான தங்கள் பிரச்னைகள், குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய செல்லிடப்பேசி எண்கள்- 9480806215, 9480806262.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com