திருமண ஆபரணக் கண்காட்சி தொடக்கம்

ஆசிய அளவிலான 3 நாள்கள் திருமண ஆபரணக் கண்காட்சி பெங்களூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஆசிய அளவிலான 3 நாள்கள் திருமண ஆபரணக் கண்காட்சி பெங்களூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நடிகை மேக்னாராஜ் குத்துவிளக்கேற்றி கண்காட்சியைத் தொடக்கிவைத்தார். இதில் கலந்து கொண்ட அதன் ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் சச்சிதேவ் செய்தியாளர்களிடம் கூறியது: 
பெங்களூரு ஜே.டபள்யூ மேரீட் ஹோட்டலில் செப். 14-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை ஆசிய அளவிலான திருமண ஆபரணக் கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சியில் நவீன வடிவமைப்பு, பாரம்பரிய கலாசாரமுள்ள தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள், திருமணங்களுக்கு மணமகன், மணமகள் அணியும் ஆடைகள், திருமண வரவேற்பில் இடம்பெறும் அரங்கம், வடிவமைப்பு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 
திருமணங்களில் வட இந்திய, தென்னிந்தியர்கள் அணியும் ஆபரணங்கள், கலாசார ஆடைகள் இடம்பெற்றுள்ளது கண்காட்சியின் சிறப்பு அம்சமாகும். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து பிரிவினரும் விரும்பும் வகையில் கண்காட்சியில் ஆபரணங்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com