மகதாயி விவகாரம்: கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு

மகதாயி தீர்ப்பு தொடர்பாக விவாதிக்க விரைவில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

மகதாயி தீர்ப்பு தொடர்பாக விவாதிக்க விரைவில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு குமாரகுருபாவில் உள்ள அரசு இல்லம் கிருஷ்ணாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
மகதாயி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக நீர்ப்பாசனத் துறை வல்லுநர்களிடம் ஆலோசிக்கப்படும். இக் கூட்டத்தில் மகதாயி தீர்ப்பு குறித்த சாதக, பாதங்கள் ஆராயப்படும். அதன்பிறகு அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி, இதுதொடர்பாக விவாதிக்கப்படும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்குப் பிறகு, அரசு தனது முடிவை அறிவிக்கும். 
வறட்சி மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய கர்நாடக வந்துள்ள மத்தியக் குழு உறுப்பினர்களுடனான சந்திப்பில், மாநிலத்தின் நிலைகுறித்து விளக்கப்படும். பெங்களூரில் செப்.18-இல் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பங்கேற்கிறார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com