நாளை குடிநீர் குறைதீர் முகாம்

நகர தெற்கு மூன்றாம் துணை மண்டலத்தில் திங்கள்கிழமை (செப். 17) குடிநீர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

நகர தெற்கு மூன்றாம் துணை மண்டலத்தில் திங்கள்கிழமை (செப். 17) குடிநீர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தெற்கு மூன்றாம் துணை மண்டலத்தில் பி.டி.எம். லேஅவுட், பி.டி.எம். லேஅவுட் 2-ஆவது ஸ்டேஜ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை குடிநீர் குறைதீர்ப்பு முகாம் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில், தண்ணீர் ரசீது, குடிநீர் விநியோக தாமதம், கழிவுநீர் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்- 22945151.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com