பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் இன்று இலக்கிய வகுப்புகள்

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 16) இலக்கிய வகுப்புகள் நடைபெற உள்ளன.


பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 16) இலக்கிய வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் இலக்கிய வகுப்புகள் வழக்கமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் தமிழ்ச் சங்க வளாகத்தில் இலக்கிய வகுப்புகள் நடைபெற உள்ளன.
இலக்கிய வகுப்பில் பேராசிரியர் கோவிந்தராஜன், சிலப்பதிகாரத்தையும், போராசிரியர் பொன்.கா.சுப்பிரமண்யம் நற்றிணையும், கவியருவி க.உ.கிருஷ்ணமூர்த்தி குற்றாலக் குறவஞ்சி பற்றியும் வகுப்புகளை நடத்துவார்கள். இலக்கிய வகுப்பில் தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு தமிழ் அமுதை பருக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com