மினி லாரி மீது கார் மோதல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் சாவு

டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த மினி லாரி மீது மோதியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.

டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த மினி லாரி மீது மோதியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த மனோஜ் (30), சின்னராஜ் (55), ஸ்டீபன், லூதர்கிங், ஜெயபிரகாஷ், சுகுணா உள்ளிட்ட 8 பேர் தும்கூரில் நடைபெறவிருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் சனிக்கிழமை சென்றனர். காலை 8 மணியளவில் தும்கூரு மாவட்டம், குனிகல் வட்டம், ஹனிமாவத்தூர் அருகே சென்ற போது, காரின் ஒரு டயர் வெடித்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த மினி லாரி மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த மனோஜ், சின்னராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஸ்டீபன், லூதர்கிங், ஜெயபிரகாஷ், சுகுணா ஆகியோர் பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஹுலியூர்துர்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com