ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றோர் நிகழ்த்தும் உரை வீச்சு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஐஏஎஸ் தேர்வில் சேர ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
இது குறித்து லா எக்ஸலன்ஸ் ஐஏஎஸ் கல்வி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் ஐஏஎஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால், பலருக்கு அதில் சேருவதற்கான நடைமுறைகள் தெரிவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மையத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 14)காலை 9.30 மணியளவில் ஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றோர் நிகழ்த்தும் உரை வீச்சு நிகழ்ச்சி சந்திரா லேஅவுட் அத்திகுப்பேவில் உள்ள லா எக்ஸலன்ஸ் ஐஏஎஸ் கல்வி மையத்தில் நடைபெற உள்ளது. இதில் ஐஏஎஸ் தேர்வில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு இலவசம். மேலும் விவரங்களுக்கு 9121412929 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.