பேருந்து சேவைகளில் சுணக்கம்

தேர்தல் பணிகளுக்காக அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குவதால், வழக்கமான பேருந்து சேவைகளை இயக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளுக்காக அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குவதால், வழக்கமான பேருந்து சேவைகளை இயக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முதல்கட்ட தேர்தல் ஏப்.18-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் மற்றும் காவல் துறையினரை அழைத்துசெல்ல ஏராளமான எண்ணிக்கையில் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்காரணமாக, ஏப்.16 முதல் 18-ஆம் தேதிவரையிலான காலக்கட்டத்தில் வழக்கமான பேருந்துசேவைகளை இயக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் அசெளரிகரியங்களை பொருத்துக் கொண்டு, ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com