தேர்தல் பணிகளுக்காக அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குவதால், வழக்கமான பேருந்து சேவைகளை இயக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முதல்கட்ட தேர்தல் ஏப்.18-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் மற்றும் காவல் துறையினரை அழைத்துசெல்ல ஏராளமான எண்ணிக்கையில் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்காரணமாக, ஏப்.16 முதல் 18-ஆம் தேதிவரையிலான காலக்கட்டத்தில் வழக்கமான பேருந்துசேவைகளை இயக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் அசெளரிகரியங்களை பொருத்துக் கொண்டு, ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.