வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் வாகனங்களில் கண்காணிப்பு சாதனம் பொருத்தத் திட்டமிட்டுள்ளதாக பெங்களூரு ஊரக மாவட்ட ஆட்சியர் விஜயசங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெங்களூரு உள்பட மாநிலத்தின் 14 தொகுதிகளில் ஏப். 18-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெங்களூரு ஊரகத் தொகுதியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக வாக்குச்சாவடிகளில் அனைத்து ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் பணி மேற்கொள்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பெட்டிகளைக் கொண்டு செல்லும் வாகனங்களில் கண்காணிப்பு சாதனம் பொருத்த திட்டமிட்டுள்ளோம். தேர்தலை நேர்மையாகவும், சிறப்பாக நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.