பெங்களூரு
"கோடைக் காலத்துக்கேற்ற ஆடைகள் அணிவது அவசியம்'
கோடைக் காலத்துக்கேற்ற காற்றோட்டம் உள்ள ஆடைகள் அணிவது அவசியம் என்று நடிகர் சந்தன் ஷெட்டி தெரிவித்தார்.
கோடைக் காலத்துக்கேற்ற காற்றோட்டம் உள்ள ஆடைகள் அணிவது அவசியம் என்று நடிகர் சந்தன் ஷெட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக ஷார்ட்ஷ் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது:-
மனிதர்களுக்கு அழகு சேர்ப்பதில் ஆடைகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. ஆனால் ஒரு சில ஆடைகள் கோடைக் காலத்தில் அணிய முடியாது.
குறிப்பாக, கோடைக்காலங்களில் பருத்தி ஆடைகள் அணிவது மிகச் சிறந்தது. பருத்தி ஆடைகளால் தோல் வியாதிகள் வருவது தடுக்கப்படும். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கோடைக் காலத்துக்கேற்ற காற்றோட்டமான ஆடைகளை அணிவது அவசியம். கோடைக்காலம் முடியும் வரை குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளை அணிவிக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் எப்.பி.பி. குழுமத்தின் மூத்த செயல் அதிகாரி ராஜேஷ்சேத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.