இலங்கை குண்டு வெடிப்பில் பலியான 5 பேரின் உடல்களை புதன்கிழமை கர்நாடகம் கொண்டுவரப்படுகிறது.
இதுகுறித்து மாநில அரசின் இணைச் செயலாளர் விஜய் மகந்தேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இதுவரை கர்நாடகத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் ஹனுமந்தராயப்பா, லட்சுமிநாராயணா, ரங்கப்பா உள்ளிட்ட 5 பேரின் உடல் புதன்கிழமை அதிகாலை பெங்களூருக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. மற்றவர்களின் உடல்கள் புதன்கிழமை பிற்பகல் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.