காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் நிபந்தனை ஜாமீனில் விடுதலை

எம்.எல்.ஏ. ஆனந்த்சிங்கை தாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.


எம்.எல்.ஏ. ஆனந்த்சிங்கை தாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
பாஜக ஆபரேஷன் கமலா திட்டம் வகுத்த போது, ராம்நகர் பிடதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். அங்கு நடந்த விருந்தில், விஜயநகரா தொகுதி எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் மீது கம்பளி தொகுதி எம்.எல்.ஏ. கணேஷ் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த ஆனந்த்சிங் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட கணேஷ், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில்  நீதிபதி பி.ஏ.பாட்டீல், கணேஷுக்கு ரூ. 2 லட்சம் பிணையத்தொகையில் புதன்கிழமை ஜாமீனில்விடுவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com