மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகன் உயிரிழந்தனர்.
தாவணகெரே மாவட்டம், சென்னகிரி வட்டம், ஹோதிகெரேவைச் சேர்ந்தவர் உமாதேவி (30). இவரது மகன் தனுஷ் (3). புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையில் வீட்டின் சுவர் இடந்து விழுந்ததில், உமாதேவி, தனுஷ் ஆகியோர் இடிபாடுகளிடையே சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த சந்தேபென்னூர் போலீஸார்,2 பேரின் சடங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.