பெங்களூரில் செப். 1-இல் திருமணமேடை நேர்காணல்

பெங்களூரில் செப். 1-ஆம் தேதி பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் திருமணமேடை நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பெங்களூரில் செப். 1-ஆம் தேதி பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் திருமணமேடை நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கை: பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மணமக்கள் பொருத்தம் பார்ப்பதற்காக 2002-இல் திருமணமேடை பிரிவு தொடங்கப்பட்டது. இதன்மூலம் 6 வாரங்களுக்கு ஒருமுறை மணமக்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் பரஸ்பரம் தங்கள் ஜோடியை தேர்வு செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது. இப்பிரிவில் தமிழினத்தை சேர்ந்த அனைத்து ஜாதியினரும் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். பலர் கலப்புத் திருமணமும் செய்து வருகின்றனர். இதுதவிர, கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவினர், தெலுங்கு நாயுடு வகுப்பினர், கைம்பெண்களும், மனைவியைப் பிரிந்த ஆண்களும், மணமுறிவு பெற்றவர்களும் திருமணமேடை பிரிவில் பதிவு செய்து பயன் பெற்றுள்ளனர். பெங்களூரை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கர்நாடகத்தின் பல பகுதிகளிலிருந்தும்,  தமிழகம், மும்பை, தில்லி, மற்றும் வெளிநாடுகளில் பணி புரிவோரும் திருமண மேடையில் பதிவு செய்துள்ளனர். இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்கள் திருமண மேடை வழியாக நடைபெற்றுள்ளன. 139-ஆவது திருமண மேடை நேர்காணல் செப். 1-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தமிழ்ச்சங்க வளாகத்தில் நடைபெறும். திருமணமேடை நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ள மணமக்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு 080-25510062 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com