பெங்களூரில் செல்டோஸ் கார் அறிமுகம்

பெங்களூரில் கியா மோட்டார்ஸின் செல்டோஸ் கார் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

பெங்களூரில் கியா மோட்டார்ஸின் செல்டோஸ் கார் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை கியா மோட்டார்ஸின் செல்டோஸ் காரை அறிமுகப்படுத்தி அக்குழுமத்தின் மேலாண் இயக்குநரும், மூத்த செயல் அதிகாரியுமான கூக்கையன் ஷிம் செய்தியாளர்களிடம் கூறியது: 
இந்தியாவில் கார்களின் விற்பனை அதிகரித்துள்ள போதும், நவீன வசதிகள் கொண்ட சொகுசு கார்களுக்கு அதிக அளவு வரவேற்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு எங்கள் நிறுவனத்தின் சார்பில் கியா மோட்டார்ஸின் செல்டோஸ் காரை தயாரித்து, பெங்களூருவில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
பெட்ரோ, டீசல் எரிபொருளில் இயங்கும் காரில் நவீன தொழில்நுட்ப வசதிக் கொண்ட என்ஜின், சிறந்த கிளட்ச் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு சில வினாடிகளில் 100 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டுள்ளது. இளைஞர்களை மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் 8 வண்ணங்களில் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 
பெங்களூருவில் இதன் விலை ரூ. 9.69 லட்சத்தில் தொடங்கி, ரூ. 15.99 லட்சம் வரை உள்ளது. தேசிய அளவில் செல்டோஸ் காரை வாங்குவதற்கு 32,035 பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன் பதிவு செய்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை(ஆக. 23) முதல் கார்களை வழங்கத் தொடங்கியுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com