இனக்கவர்ச்சி இல்லை என்றால் மனித இனம் அழிந்து போகும் என்று இந்தி நடிகர் ஆதித்தராய் கபூர் தெரிவித்தார்.
பெங்களூரில் வியாழக்கிழமை டிடிகே குழுமத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: நமது சமூகத்தில் தொன்றுதொட்டே காதல் என்பது இருந்து வந்துள்ளது. இதற்கு இனக்கவர்ச்சி மட்டுமே என்று கூற முடியாது.
நமது சந்ததி வளர காதலும், திருமணமும் இன்றியமையாதது. எனவே இனக்கவர்ச்சி என்பது அவசியமான ஒன்று. இனக்கவர்ச்சி இல்லை என்றால் மனித இனம் அழிந்து போகும். அதிலும் வரையறை மீறாத இனக்கவர்ச்சிதான் அவசியம் என்றார். நிகழ்ச்சியில் டிடிகே குழுமத்தின் வர்த்தக பிரிவு பொது மேலாளர் விஷால் வியாஸ் கலந்து கொண்டார்.