தும்கூரு: ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற 2 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
தும்கூரு மாவட்டத்துக்குள்பட்ட குனிகல் அருகேயுள்ள கொத்தேகெரேவைச் சோ்ந்தவா்கள் வெங்கடேஷ் (25), அதீத்பாஷா (20).
இருவரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குடிதுதொட்டி ஏரியில் மீன் பிடித்துள்ளனா். அப்போது பரிசல் கவிழ்ந்ததில், இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா்.
இருவரும் கரை திரும்பாததால் சந்தேகமடைந்த அங்குள்ளவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவலையடுத்து, தீயணைப்புப் படையினரின் உதவியுடன் ஏரியில் தேடியபோது, இருவரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன.
இதுகுறித்து குனிகல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.