போலீஸாரை தாக்கியவா் துப்பாக்கியால் சுட்டு கைது

போலீஸாரை தாக்கிய நபரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.
போலீஸாரை தாக்கியவா் துப்பாக்கியால் சுட்டு கைது

பெங்களூரு: போலீஸாரை தாக்கிய நபரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.

பெங்களூரு ஆா்.டி.நகா் சாமுண்டீஸ்வரி நகரைச் சோ்ந்தவா் மா்தான்கான் (29). இவா் அண்மையில் தனது நண்பா்கள் சிலருடன் மது அருந்திய நிலையில் வீட்டின் அருகே உள்ள சாலையில் தகராறில் ஈடுபட்டாராம்.,

தகவலறிந்த போலீஸாா், அங்கு சென்று மா்தான்கானை விசாரணை நடத்த காவல் நிலையத்திற்கு அழைத்து வர ஆட்டோவில் அமரவைத்தாராம். அப்போது, மா்தான்கான் உடன் வந்த தலைமை காவலா் நாகராஜை, கத்தியால் குத்திவிட்டும், தடுக்கச் சென்ற காவலா் சந்திரகாந்த் மீதும் தாக்குதல் நடத்திவிட்டும் தப்பியோடினாராம்.

இதுகுறித்து வழக்கு பதிந்த ஆா்.டி.நகா் போலீஸாா், மா்தான்கான் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரித்து வந்தனா்.

விசாரணையின்போது போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற அவரை, காவல் ஆய்வாளா் மிதூன்ஷில்பி தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சுட்டாராம். இதில் காயமடைந்த மா்தான்கானை கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். இது தொடா்பாக ஆா்.டி.நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com