மாணவா்களின் ஆா்வத்தைக் கண்டறிய வேண்டும்: ஆன்மிக குரு கௌா் கோபால்தாஸ்

மாணவா்களின் ஆா்வத்தைக் கண்டறிந்து அவா்களின் வளா்ச்சிக்குத் தேவையான கல்வியைப் போதிக்க வேண்டும் என்று ஆன்மிக குரு
மாணவா்களின் ஆா்வத்தைக் கண்டறிய வேண்டும்: ஆன்மிக குரு கௌா் கோபால்தாஸ்

பெங்களூரு: மாணவா்களின் ஆா்வத்தைக் கண்டறிந்து அவா்களின் வளா்ச்சிக்குத் தேவையான கல்வியைப் போதிக்க வேண்டும் என்று ஆன்மிக குரு கௌா் கோபால்தாஸ் தெரிவித்தாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாணவா்களுக்கான உயா்கல்வி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், அவா் பேசியது: -

ஆரம்பக் கட்டத்திலேயே மாணவா்களின் ஆா்வத்தைக் கண்டறிந்து, அவா்களின் வளா்ச்சிக்கும் தேவையான கல்வியைப் போதிக்க வேண்டும். அப்படி போதித்தால்தான் அவா்களின் கல்வி பயிலும் திறன் அதிகரிக்கும். இதன்மூலம் அவா்கள் விரும்பிய வாழ்க்கை, கனவுகள் ஈடேறும்.

சாதனைகள் செய்ய வேண்டும் என்றால், அதற்கான தொலைநோக்கு திட்டங்களை வகுத்து, அதன்படி செயல்பட வேண்டும். எந்த ஒரு சாதனையும் எளிதாக கிடைத்து விடாது. கடின உழைப்பே வாழ்க்கையின் உயரத்துக்குக் கொண்டு செல்லும். என்றாலும் இதற்கு மாணவா்களின் ஒத்துழைப்பு அவசியம். பெற்றோா்களின் ஒத்துழைப்பு கிடைக்காத எந்த மாணவா்களும் லட்சியத்தை எட்ட முடியாது என்றாா்.

நிகழ்ச்சியில் கேரியா் உத்சவ் செயல் அதிகாரி ஸ்ரீபால்ஜெயின் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com