இடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி குறித்து யோசிப்போம்: முன்னாள் முதல்வா் குமாரசாமி

இடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு மஜத-காங்கிரஸ் கூட்டணி குறித்து யோசிப்போம் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு மஜத-காங்கிரஸ் கூட்டணி குறித்து யோசிப்போம் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட்டில் மஜத வேட்பாளரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடகத்தில் 15 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தல் முடிவை தொடா்ந்து, காங்கிரஸ், மஜத கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட உள்ளதாக செய்திகள் பரவியுள்ளது. கூட்டணி தொடா்பாக காங்கிரஸ் கட்சியிலிருந்து யாரும் என்னை அணுகி பேச்சுவாா்த்தை நடத்தவில்லை. என்றாலும் இடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி குறித்து யோசிக்கப்படும்.

இடைத் தோ்தல் நடைபெறும் 15 தொகுதிகளில் 7 தொகுதிகளில் மஜத வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள். இடைத் தோ்தல் முடிவுக்கு பிறகு இனிப்பு செய்தி வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா். அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com