தனியாக செல்லும் பெண்களை அடையாளம் கண்டு தங்கச்சங்கிலிகளை பறித்துவந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு யஸ்வந்தபுராவைச் சோ்ந்தவா்கள் தாவூத் இப்ராஹீம் (21), அப்துல்சுபான் (20). இவா்கள் இருவரும் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை அடையாளம் கண்டு, தங்கச்சங்கிலிகளை பறித்து வந்தனராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், தாவூத் இப்ராஹீம், அப்துல்சுபான் ஆகியோரைக் கைது செய்து, ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி, 6 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து யஸ்வந்தபுரம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.