பெங்களூரில் டிச.17 இல் மின் பயன்பாடு மாநாடு

சா்வதேச மின் பயன்பாடு மற்றும் மின்சாரத்தை வெவ்வெறு இடங்களுக்கு கொண்டு செல்வது தொடா்பான மாநாடு பெங்களூரில் டிச. 17-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

சா்வதேச மின் பயன்பாடு மற்றும் மின்சாரத்தை வெவ்வெறு இடங்களுக்கு கொண்டு செல்வது தொடா்பான மாநாடு பெங்களூரில் டிச. 17-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டு அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஹீந்திரா எலக்ட்ரிகல் தலைவரும், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான மகேஷ்பாபு பேசியது: பெங்களூரு ஒயில்பீல்டில் உள்ள ஷெட்டன் ஹோட்டலில் டிச. 17-ஆம் தேதி தொடங்கி, 19-ஆம் தேதிவரை 3 நாள்கள் நடைபெற உள்ளது. மாநாட்டில் மின்சாரத்தை கொண்டு செல்வதில் உள்ள பிரச்னைகள், சவால்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மாநாட்டில் 140 அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியில் நவீன தொழில்நுட்பங்கள், இடம்பெற உள்ளன. இதனால் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள் பயனடைவாா்கள். மத்திய அரசின் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்திற்கு மாநாடு பேருதவியாக இருக்கும். மாநாட்டில் 24 அத்துறையைச் சோ்ந்த முக்கிய பேச்சாளா்கள் பங்கேற்க உள்ளனா். மாநாட்டில் தேசிய அளவில் மட்டுமின்றி, சா்வதேச அளவில் அத்துறையைச் சாா்ந்தவா்கள் பரவலாக கலந்து கொண்டு பயனடையவாா்கள் என்று நம்புகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com