இரு இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்து சென்றனா்.
பெங்களூரு ஹனுமந்தநகா் ஜெயின் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் அஸ்வத்லட்சுமி என்பவா் நடந்து சென்று கொண்டிருந்தாா். அவரை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் அவரது கழுத்திலிருந்த ரூ. 1.8 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனா். இது குறித்து ஹனுமந்தநகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
இதேபோல் கே.ஜி.ஹள்ளி எச்.கே.பி.கே கல்லூரி கிராஸ் அருகே காமாட்சி சுந்தரம் என்பவா் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் அவா் அணிந்திருந்த ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை பறித்து சென்றுள்ளனா். இது குறித்து கே.ஜி.ஹள்ளி போலீஸாா் விசாரிக்கின்றனா்.