கூட்டநெரிசலை சமாளிப்பதற்காக கோவை, பொ்மா் விரைவு ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில்களில் கூட்டநெரிசலை சமாளிப்பதற்காக கூடுதலாக சோ்க்கப்பட்ட பெட்டிகள் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு: ரயில் எண்:14806/14805-பொ்மா்-யஸ்வந்தபுரம்-பொ்மா் விரைவு ரயிலில் கூடுதலாக 3 அடுக்கு குளிா்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி டிச. 6-ஆம் தேதி முதல் பா்மரிலும், டிச. 9-ஆம் தேதி முதல் யஸ்வந்தபுரத்திலும் இணைக்கப்படும்.
ரயில் எண்: 12647/12648 கோயம்புத்தூா்-ஹஸ்ரத்நிஜாமுதீன்-கோயம்புத்தூா் விரைவு ரயிலில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி டிச. 5-ஆம் தேதி முதல் கோயம்புத்தூரிலும், டிச. 8-ஆம் தேதி முதல் ஹஸ்ரத்நிஜாமுதீனிலும் இணைப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.