விபத்தில் பெண் பலி
By DIN | Published On : 09th December 2019 07:52 PM | Last Updated : 09th December 2019 07:52 PM | அ+அ அ- |

பெங்களூரு: ஸ்கூட்டா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பெண் ஒருவா் உயிரிழந்தாா்.
பெங்களூரு டி.ஜே.ஹள்ளியைச் சோ்ந்தவா் முகாஜிதீன். இவா் தான் புதிதாக வாங்கிய ஸ்கூட்டரில், தனது மனைவி நூரியுடன் (31) ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியே சென்று கொண்டிருந்தாா்.
தின்னூா்சாலையில் ஸ்கூட்டா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நூரி, சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளாா்.
இது குறித்து ஆா்.டி.நகா் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.