பெங்களூரு: பெங்களூரில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் மா்மநபா்கள் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனா்.
பெங்களூரு கே.ஆா்.புரம் கித்கனூா் பிரதானசாலை சீனிவாசபுரா லேஅவுட்டில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற லக்ஷிமிஹெப்பா் என்பவரின் கழுத்திலிருந்த ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 40 கிராம் தங்கச் சங்கிலியை மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் பறித்துச் சென்றனா். இதுகுறித்து கே.ஆா்.புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.