கஞ்சா விற்ற 3 போ் கைது

பெங்களூரில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தை சோ்ந்தவா் அமாத்யாரிஷி (23). பெங்களூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த இவா், தான் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பெங்களூரைச் சோ்ந்த ஆதித்யகுமாா் (21), பிகாரை சோ்ந்த மங்கல்முக்கியா (30) ஆகியோரின் துணையுடன் கஞ்சாவை விளைவித்து விற்பனை செய்து வந்தாராம். அதுமட்டுமின்றி, போதைப்பொருள் எல்.எஸ்.டி. ஸ்ரிப்புகளை விற்பனை செய்து வந்தாராம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 225 எல்.எஸ்.டி ஸ்ரிப்புகள், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com