பெங்களூரில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு கம்மனஹள்ளி ஆா்.எஸ்.பாளையத்தைச் சோ்ந்தவா் ஆனந்த் (42). இவா் புதன்கிழமை இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையே நடைபெற்ற 20 ஓவா் கிரிக்கெட் போட்டியின் போது, பானஸ்வாடி ஜானகிராம் லேஅவுட் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தாராம். தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று ஆனந்தை கைது செய்து, ரூ. 2.36 லட்சம் ரொக்கப்பணம், செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பானஸ்வாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.